ஓரிரு மாதங்களுக்கு முன்னர், திருக்கோணமலையின் கோமரங்கடவைப் பிரதேசத்திலுள்ள கிவுலக்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்கல்வெட்டு, இலங்கை ஆய்வுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இக்கல்வெட்டைப் படித்த பேராசிரியர் ப.புஷ்பரட்ணம்
(2021:6-7), மற்றும் கலாநிதி கா.இந்திரபாலா (2021:8,18)
ஆகியோர் இக்கல்வெட்டு தொடர்பான புதுமையான – அருமையான தகவல்கள் அடங்கிய காத்திரமான கட்டுரைகளை பொது ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர். இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் காலிங்க விஜயவாகுவை, அவர்களால் கலிங்க மாகோனாக அடையாளம் காண முடிந்ததே இக்கல்வெட்டின் சிறப்பாக இருந்தது. கலிங்க மாகோனை
கிவுலக்கடவலைக் கல்வெட்டின் வாசகம் வருமாறு:
[சிதைந்த வடமொழி சுலோகம்]
ஸ்வஸ்திஸ்ரீ …….[த்திகள்?] [ஸ்ரீகுலோ]த்துங்கசோழக் காலிங்கராயனேன் ஈழ [மண்டலமான மும்முடிச்] சோழமண்டலமெறிந்தும் கங்கராஜ காலிங்க விஜயவாகு தேவற்கு வீராபிஷேகம் பண்ணுவித்து அநந்தரம் அஷ்ட[நேமி பூசை கால]ங்களில் ஆதிக்ஷேத்ரமாய் ஸ்வயம்புவுமான திருக்கோ[ணமாமலை]யுடைய[1] நாயனாரை தெண்டன் பண்ணி இந்நாயனாற்கு ச[க்தி]ப்ரதிஷ்டையில்லாமையில் திருக்காமக்கோட்ட நாச்சியாரை எழுந்தருளிவித்துத் திருப்ரதிஷ்டை பன்ணுவித்து நமக்கு [ப்ராப்தமாய்] வருகிற காலிங்கராயப் பற்றில் மாநாமத்[த][2] நாட்டில் லச்சிகா[ம]புரம்[3] இதுக்குள் நாலூர் வேச்சர்களுள்ளிட்ட நிலமும் …….. இதில் மேல் நோக்கிய மரமும் கீழ் நோக்கிய கிணறும் பேருடரை நீக்கி குடிமக்களுள்பட இந்நா[ச்சியார்க்கு திருப்]படிமாற்றுக்கும் மண்டபக் கொற்றுக்கும் சாந்த்ராதித்தவரையும் செல்லக் கடவதாக ஹஸ்தோதகம் பண்ணிக் குடுத்தேன். இ....லுள்ளாரழிவு படாமல்……. பெறுக்கிவுண்டார்கள் [ஆ]ய் நடத்தவும் இதுக்கு . .
. . ண்டாகில் காக்கையும் நாயும்மாக . . டையார் பி... கெங்கைக் கரையிலாயிரங்குரால் பசுவைக் கொன்றா[ர்பாவ]ங் கொண்டார்கள் ஆயிரம் ப்ராஹ்மணரைக் கொன்றார் பாவ[ங் கொண்]டார்கள் மேலொரு…..மாற்றம் விலங்குரைப்பார் .. காலிங்கராயரின் [சொல்படி] …..[ச?]த்தியஞ் செய்வார் செய்வித்தார்”
(படம்: மரு.த.ஜீவராஜ் அவர்கள்)