ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 02

0 comments

 முந்தைய பாகம்:

ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 01



6.2  பொபி 7 ஆம் நூற்றாண்டில் சங்கரர் ஆறுமதங்களையும் தத்துவார்த்தமாக ஒருங்கிணைத்து ஒரே அமைப்பாக ஆக்கி, அதைப் பின்பற்றும் துறவியர் மரபை உருவாக்கினார். ‘ஷண்மத சங்கிரகம்’ என அது அழைக்கப்படுகிறது. கவனியுங்கள் ஆறு religionகளை அவர் ஒன்றாக்கவில்லை. ஆறு தரப்புகளை ஒன்றாக்கினார். அதாவது ஆறு வழிபாட்டுமுறைகளை இணைத்தார்.

 

மேலும் வாசிக்க »

ஏன் எனக்கு இந்து மதம் என ஒன்று இல்லை 01

0 comments

 (எழுத்தாளர் ஜெயமோகனின் "இந்துமதம் என ஒன்று உண்டா" தொடருக்கான மறுப்பு)


இந்துமதம் என ஒன்று உண்டா (1)


இந்துமதம் என ஒன்று உண்டா (2)


இந்துமதம் என ஒன்று உண்டா (3)




அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். தங்கள் நலம் விழைகிறேன். '

வாசிக்கும் நண்பர்களுடன் ஏதாவது உரையாடும் போது உங்கள் பெயர் வந்துவிடும். உரையாடும் எல்லோருமே எங்கோ ஓரிடத்தில் உங்களோடு முரண்படுபவர்கள். ஆனால் தமிழ் இலக்கிய உலகிலும் சமகால  அறிவியக்கத்திலும் உங்கள் தவிர்க்கவியலாமையை ஏற்றுக்கொண்டவர்கள். ஓராண்டுக்கு முன் தங்கள் வாசகர்களுள் ஒருவனான நீதுஜன் பாலாவின் அழைப்பின் பேரில் “திகட சக்ர” அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வெண்முரசு பற்றிய விவாதமொன்றில் நடுவராகப் பணியாற்றியிருந்தேன். அந்தப் பின்னணியில் பலநாளாகவே எழுதி வெளியிடாது வைத்திருந்த என் வெண்முரசு அனுபவத்தை அண்மையில் தான் முழுமைப்படுத்தி என் வலைப்பதிவில் வெளியிட்டுள்ளேன்.  இலக்கிய உலகில் ஓய்வின்றி தாங்கள் படைத்துக்கொண்டிருக்கும் சாதனைகளுக்குப் பாராட்டு.

 

உங்கள் “நான் இந்துவா” கட்டுரை தான் எனக்கு உங்கள் வலைத்தளத்தை அறிமுகஞ்செய்து வைத்தது என்பதை என் முந்தைய மடலிலும் குறிப்பிட்டிருக்கிறேன். ‘இந்து’ அடையாளத்தையும் ஈழத்தமிழ்ச் சூழல் எனக்களித்த சைவ அடையாளத்தையும் சார்ந்து எழுந்த ஏராளமான சந்தேகங்களுக்கு விடை கண்டுகொண்ட பின்னர் தான், நான் ‘அலகிலா ஆடல்’ நூலை எழுதினேன்.

 

மேலும் வாசிக்க »
 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner