Posts

Showing posts with the label திருக்கோவில்

கீழைக்கரையின் தனித்துவம்: தேசத்துக்கோவிலும் திருப்படைக்கோவிலும்

Image
இந்தக் கட்டுரை கொஞ்சம் நீளமான கட்டுரை. கிழக்கின் சாதியம்,  பிரதேசவாதம், கோவில் வழிபாட்டு முறைகள், தனித்துவமான மரபுகள் என்று  ஓரளவு அலுப்படிக்கலாம் என்பதால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகிறேன். ஆனால் கிழக்கிலங்கை, வரலாறு, சமூகவியல், மானுடவியல், ஓரளவு சர்ச்சை என்பவற்றில் ஆர்வம் கொண்டவர்களை நிச்சயமாக ஏமாற்றாது. 😀 நீங்கள் தொடர்ந்து படிக்கலாம்.  மானுடவியல் பேராசிரியர் மார்க். பி.விட்டாகரின் "Amiable Incoherence"  என்ற நூலை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அந்தத் தலைப்பே கவித்துவமானது.  நமக்கு சில நண்பர்கள் இருப்பார்கள் அல்லவா? நேரில் கண்டால் காது வரை சிரிப்பார்கள், தோளில் கை போடுவார்கள், அத்தனை அன்பாகப் பேசுவார்கள். ஆனால் அடியாழத்தில் எங்கோ நம் மீது கசப்பு இருக்கும்.   நாம் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல என்பதை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் உணர்த்திக்கொண்டே இருப்பார்கள்.  அது தான் Amiable Incoherence. நெருக்கமில்லாத நட்பு என்று மேம்போக்காக மொழிபெயர்க்கலாம். ஓரளவு உள்ளூர் மொழியில் சொல்வதென்றால் "பளக்கம் போல படம் காட்றதுகள்" 😄 இலங்கைத்தமிழ...

தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு!

Image
தென்கிழக்கிலங்கையின் மிகப்புராதனமான ஆலயங்களில் ஒன்றான திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலுக்குள் நுழைந்து நீங்கள் இடப்பக்கம் திரும்பினீர்களென்றால், உள்வீதி மதிலோடு இணைந்தபடி அடைத்துக் கட்டப்பட்டுள்ள ஓர் அறையைக் காணலாம். எட்டிப்பார்த்தீர்களென்றால் அங்கு கட்டுமானப் பொருட்களும் சில விக்கிரகங்களும் இருக்கும். அவை கடந்த குடமுழுக்கின் போது அகற்றப்பட்ட, பின்னப்பட்ட விக்கிரகங்கள். அப்படியே இன்னும் கஷ்டப்பட்டு எட்டி அறையின் மேற்குப்புறமாக பார்த்தீர்களென்றால், மூலையில் தரைக்கு கொங்கிரீட் பரவி அதில் நடப்பட்டுள்ள கற்றூண்களையும் பலகைக்கற்களையும் காணலாம். உற்றுப்பார்த்தால் அவற்றில் தேய்ந்து போன எழுத்துக்களையும்  பார்க்க முடியும். இன்று பண்டகசாலையாக பயன்படும் இந்த அறையில் நாட்டப்பட்டிருக்கும் ஒரு தூண் தான் தம்பிலுவில் கல்வெட்டு. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களும் கற்றூண்களும் காலனித்துவ கால ஆவணங்களில் இலங்கையின் தொல்பொருட்கள், மரபுரிமை நகரங்கள், பாரம்பரியச் சொத்துக்கள் பற்றிய குறிப்புக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்தாலும், அவை பற்றிய நவீன மு...

ஒல்லாந்தரை ஏமாற்றிய பாதிரியாரின் முக்காடு

Image
மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் படுவான்கரைக் கிராமங்களை இணைத்தபடி ஓடுகிறது B18 வழித்தட எண் கொண்ட வீரமுனை - அம்பிளாந்துறை வீதி. மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும் இடையே அதன் எட்டாம் கிமீ மைல்கல்லுக்கு (மைல்கல்லா கிலோமீட்டர் கல்லா? 🤔) அருகில் நின்று மேற்கே பார்க்கும் போது இந்த மலையைக் காணலாம். இங்கிருந்து மட்டுமல்ல. மேகமூட்டம் இல்லாத நாளொன்றில் கீழைக்கரையில் தெற்கே கோமாரியிலிருந்து வடக்கே மட்டக்களப்பு நகரம் வரை மேற்குப்பக்கம் திரும்பி நின்றால் இதைக் காணலாம் என்கிறார்கள். அம்பாறை மாவட்டம் உகணைக்கு அருகே உள்ள வெலிம்பே ஹெல (Walimbe Hela) என்ற மலை தான் இது.   வெலிம்பே ஹெல வெலிம்பே ஹெல இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய மலை.  655 மீ உயரமானது. ஆங்கிலத்தில் Fraiar's Hood என்று பெயர். பொருள் பாதிரியாரின் முக்காடு. தூரத்தில் நின்று பார்க்கும் போது சில குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவுகளின் மதகுருமார் அணியும் தலையணி போல் தென்பட்டதால் இதை வெள்ளையர்கள் அப்படி அழைத்திருக்கிறார்கள்.  பாதிரியாரின் முக்காடு மலை, ஒரு கிட்டிய தோற்றம் (Credits: lakdasun.lk) இ...

கூத்து என்னும் மக்கள் கலை

Image
விநாயகபுரம் சிவன் கோவில் முன்றல் கடந்த அக்டோபர் மாதம் 15ஆம் திகதி. ஒரு தொலைபேசி அழைப்பு. "அண்ணா, வாற சனிக்கிழமை வினாயகபுரம் சிவன் கோவிலடில கூத்து வச்சிருக்கம். உங்கள அதிதியா போட்டிருக்கிறன். வருவிங்க தானே" என்று தொலைபேசியில் சொன்னவர் தங்கை விலோஜினி. கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறை இறுதியாண்டு மாணவி. சில மாதங்களுக்கு முன்பு தான் சந்தித்து தனது ஆய்வுத்தலைப்பு திருக்கோவில் பிரதேச கூத்துக்கலையை மையமாகக் கொண்டது என்பதைக் கூறி, அது தொடர்பான ஓரிரு வாய்மொழி வரலாறுகளை சேகரித்துச் சென்றிருந்தார். திருக்கோவில் பிரதேசம் பழைய மட்டக்களப்புத் தேசத்தின் பண்பாட்டுக்கு அடிப்படையாக அமைந்த தொட்டில். அங்கு நீடிக்கின்ற கலைக்கும் நீண்ட வரலாறு உண்டு. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்தில், காலனித்துவ காலம் வரை ஆடல் பெண்கள் பணியாற்றிய தகவல் கிடைக்கிறது. அக்கோவிலின் நிர்வாகத்தில் முதன்மை இடம்பிடிக்கும் சமூகப்பிரிவொன்று தனது பட்டமாக "நட்டுமுட்டு நாடகசாலை கொண்ட கோத்திரம்" என்பதைச் சொல்லி வந்திருக்கிறது. நட்டுமுட்டு என்றால் மேளதாளம். திருக்கோவிலின் வரலாற்று பூர்வமான தோற்...

திருக்கோவில் முருகு

Image
திருக்கோவில் ஆடி அமாவாசை ஆழிப்புனலாடல் காட்சி (நன்றி: Akish 4K Studio ) இலங்கையின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்கள் இணைந்த பழைய மட்டக்களப்புத் தேசத்தில் முதன்மை பெற்று விளங்கிய திருத்தலம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். வடக்கே ஏறாவூர்ப்பற்று முதல் தெற்கே கூமுனைப்பற்று வரை, சுமார் இருநூறு கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பில் வாழ்ந்த சைவத்தமிழ் மக்கள் கொண்டாடிப் போற்றிய திருத்தலம் அது. முழு மட்டக்களப்புத் தேசத்துக்குமே உரிமையாகவிருந்த அக்கோவில், தேசத்துக்கோவில் என்ற மரியாதையைப் பெற்றிருந்தது. வரலாற்றில் சோழராட்சிக்காலத்துடனும், கலிங்க மாகன் காலத்துடனும் இணைத்து நோக்கக்கூடிய பழைமை வாய்ந்த திருக்கோவில், கண்டி மற்றும் கோட்டை மன்னர்களின் மானியங்களையும், மட்டக்களப்பை ஆண்ட சிற்றரசர்களின் மதிப்பையும் பெற்ற சரித்திரப் பிரசித்தி வாய்ந்த அருட்கோவில். அத்திருத்தலத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று பூர்வமாக ஆராய்கின்றது இந்த ஆய்வுக்கட்டுரை.   அறிமுகம் திருக்கோவில் என்பது தமிழரைப் பொறுத்தவரை புனிதமான சொல்லாடல். புகழ்பெற்ற இறைக்கோட்டங்களை எல்லாம் திருக்கோவில...