Posts

தைப்பூச விழாக் கண்ட சங்கமன்கண்டி மலைக்குமரன்!

Image
கதிர்காமப் பாதயாத்திரையில் தென்கிழக்கிலங்கையின் காட்டுவழி நோக்கி நகர்பவர்கள் திருக்கோவிலை அடுத்துச் சென்றுசேரும் பதி சங்கமன்கண்டி. மட்டக்களப்பு - பொத்துவில் பெருந்தெருவில் திருக்கோவிலுக்குத் தெற்கே சரியாக 13 கிமீ தொலைவில் அத்திருத்தலம் அமைந்துள்ளது. மரபாக அதை "திருக்கோவிலிருந்து ஒருகாமூச்சு" என்பார்கள். கதிர்காமப் பாதயாத்திரையின் போது பொருட்களை காவுதடியில் (கா) சுமந்து செல்வோர் நடைக் களைப்புத் தீர தங்கியிருந்து மூச்செடுக்கும் - ஓய்வெடுக்கும் தூரம் தான் ஒருகாமூச்சு. சங்கமன்கண்டி என்பது இங்குள்ள சிறுகுன்றின் பெயர். சிங்களத்தில் கந்த என்பது மலை. சங்கமன்கந்த என்றால் சங்கமனின் மலை என்று பொருள். ஆனால் தமிழில் கண்டி என்பது மலைப்பள்ளத்தாக்கு, ஒடுங்கிய பாதை, நுழைவாயில், மேடான இடம் என்றெல்லாம் பொருள் கொண்ட சொல். அதனாலேயே மலைநாட்டில் ஒடுங்கிய பாதையோரம் உருவாகி எழுந்த நகரொன்றும் அப்பெயரைப் பெற்றது. பொலிகண்டி, கோவிலாக்கண்டி என்று இடங்களெல்லாம் வட இலங்கையிலும் உள்ளன. எனவே சங்கமன்கண்டி என்பது சங்கமனின் நகரம் என்று பொருள். யார் அந்த சங்கமன் என்பதில் பல்வேறு கருத்துக்கள் உள்ளன. பண்டையகால ...

விபுலானந்த அடிகளார் வழியில் தமிழ்க் கலைச்சொல்லாக்கம்

Image
திறவுச் சொற்கள்:  இலக்குமொழி (Target Language), ஒலிபெயர்ப்பு (Transliteration), கலைச்சொல் (Technical Term), சொல் வாங்குதல் (Calque), ஞால மாமொழி (Lingua Franca),  தடந்தகை (Strategy), புதுச்சொல்லாக்கம் (Neologism), பொருளுறை மொழியாக்கம் (Semantic Translation),  மூலமொழி (Source Language). 1.0 அறிமுகம் தமிழின் முதற்பேராசிரியர், தமிழை அறிவியல் மொழியாக வளர்த்தெடுக்க அரும்பாடுபட்டவர், மறைந்த யாழ் இசைக்கருவியையும் நாடகத்தமிழையும் மீட்க முயன்றவர் முதலிய பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் விபுலானந்த அடிகளார் . பிறமொழியில் அமைந்துள்ள அறிவுச்செல்வங்கள் ஒரு  மொழிக்கு மொழிமாற்றப்படுவது, அம்மொழியின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்பதை நன்குணர்ந்திருந்த அடிகளார், தமிழில் அறிவியல் நூல்கள் வெளிவரவேண்டும் என்றும் கலைச்சொற்கள் ஏராளமாக உருவாகவேண்டும் என்றும் விடாது வலியுறுத்திவந்தவர். கலைச்சொல்லாக்கத் துறை சார்ந்த அடிகளாரின் சிந்தனைகள் இதுவரை தொகுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, அடிகளார் கலைச்சொல்லாக்கம், மொழியாக்கம் தொடர்பில் கொண்டிருந்த கோட்பாடுகளை மதிப்பிட முயலும் இவ்வாய்வுக்கட்டுரை,...