Posts

தமிழ்ப் புத்தாண்டும் மரபுக்குறியீடுகளும்

Image
புத்தாண்டு வாழ்த்துப் பரிமாறியபோது அவதானித்தது இது. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப் பொருத்தமான வாழ்த்து அட்டை எதுவும் இணையத்தில் இல்லை. பெரும்பாலும், கோலம், நிறைகுடம், வாழைத்தோரணம், தஞ்சைப்பெருங்கோவில், பிள்ளையார், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்ட சாதாரண வாழ்த்து அட்டைகள். இவையா தமிழ்ப்புத்தாண்டின் அடையாளம்? புத்தாண்டுக்கான வாழ்த்து அட்டை, புத்தாண்டு மரபுகளைக் காண்பிக்க வேண்டாமா? செய்தெண்மையை (AI) நாடினால், அது தரும் படங்களும் தகவற்பிழை கொண்டனவாக இருந்தன. சாமந்திப்பூக்கள்? - சாமந்திப்பூக்கள் கொண்ட தோரணம் (சாமந்தி / marigold நம் மண்ணின் மலர் அல்ல; அது தென்னாசியாவில் தோன்றவில்லை; அமெரிக்காவிலிருந்து இறக்குமதியானது). சாமந்திப்பூ நம் மண்ணின் மலர் அல்ல - சுவசுதிகா சின்னம் பொறித்த நிறைகுடம் (வடநாட்டு மரபு, தமிழ் மரபில் திருநீறு சாற்றியிருப்பது அல்லது திலகம் தரித்தது) நிறைகுடத்திற்கு திருநீறு சாற்றுவதே தமிழ்மரபு. - நாமம் தரித்த சூரியன் (சமயக்குறி எதுவுமற்ற சூரியன், சைவத்தமிழ் மரபில் திருநீறு தரித்த சிவசூரியன்), இப்படிப்பல. சரிதான் சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். பிற இனக்குழுக்...

ஆயிரங்கால் மண்டபம் (கதை)

Image
நன்கு விடிந்திருந்தது. இரவெல்லாம் அழுது வீங்கிச் சிவந்த கண்களுடன் மனைவி வாசற்படியில் அமர்ந்திருந்தாள். உறவினர்களெல்லாம் கூடிநின்றார்கள். தூரத்தில் அவரைக் கண்டதுமே தலைவிரிகோலமாக ஓடிவந்து கட்டியணைத்து அழுதவள், தோளில் அறைந்து திட்டினாள். "ஐயோ மனுசா... எங்க கிடந்து வாறாய்.. உன்னக் காணாம எங்கெல்லாம் தேடுற...." அவள் நன்கு பயந்திருந்தாள். அவர் பெருமிதத்துடன் தொண்டையைச் செருமினார். நடந்ததெல்லாம் சொல்ல மகிழ்ச்சியோடு வாயைத் திறந்தவருக்கு அடுத்தகணம் அந்த எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. " இங்கு நடக்கும் எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இது என் கட்டளை" "அது.... அது ஒண்டுமில்ல... சிவலை காணாத்துப் பொயித்து. தேடிக் கொண்டு சங்கமக்கண்டிக் காட்டுக்குள போன நான் வழி மாறித்தனே..." "எண்ட தலே.. அங்கென்னத்துக்கு தனிய திரிஞ்ச நீ..... தலை தப்பின தம்புரான் புண்ணியம்..." "செரி கண்ணத் துறை.. அதான் வந்தித்தனே... எல்லாரும் பாத்து சிரிக்குதுகள் ஒள்ளம் தள்ளி நில்லு..." அவர் சிரித்தபடி தன்னை அணைத்திருந்த அவள் கைகளை விடுவித்தார். வெட்கத்துடன் நெளிந்த அவள் "செ...

சிங்களக் கல்வெட்டில் கலி ஆண்டு

Image
கலியாண்டுத் தொடரின் பாவனையை இலங்கையில் தேடிக்கொண்டிருந்தபோது முக்கியமான தொல்லியல் சான்று ஒன்று கிடைத்தது. கண்டி நகருக்கருகே மாவலியாற்றின் கரையில் "கம்பளை" ஊரில், கண்டி அரசு தோன்றுவதற்கு முன்னர் “கங்காசிறீபுர அரசு” நூறாண்டுகள் நீடித்திருந்தது. அந்தக் கங்காசிறீபுரத்தின் பழைமைவாய்ந்த விகாரங்களில் ஒன்றான நியங்கம்பாய (Niyamgampāya) இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது. தற்போதுள்ள அதன் கட்டுமானம் இருநூறாண்டுகள் பழைமைவாய்ந்தது என்றபோதும், அவ்விகாரம் அதற்கும் பல நூறாண்டுகள் தொன்மையானது என்கிறார்கள். கண்டியின் கடைசி மன்னன் சிறீ விக்கிரம இராசசிங்கன் காலம் வரை (1804) இடம்பெற்ற தொடர்ச்சியான திருப்பணிகளால் அங்கிருந்த தொல்பொருட்கள் பல மறைந்தொழிந்துவிட்டன. அப்படி, நியங்கம்பாய விகாரத்தில் இருந்த கம்பளை அரசன் மூன்றாம் விக்கிரமபாகுவின் (1357 - 1374) சிங்களக் கல்வெட்டொன்று இன்று மறைந்துவிட்டது. ஆனாலும் நல்லூழாக ஏட்டில் எழுதிவைக்கப்பட்ட அதன் பிரதி கிடைத்திருக்கிறது. இலங்கையில் கலி ஆண்டின் பயன்பாடு பற்றிய மிகப்பழைய சான்றுகளுள் ஒன்று அது. விக்கிரமபாகு அரசனின் ஆட்சியாண்டு மூன்று ஆண்டுக்கணக்குகளில் அங...

சிங்கள இலக்கியங்களைப் படைத்த தமிழர்

Image
சீதாவாக்கை அரசின் முதலாம் இராசசிங்க மன்னன் (~1600) அவையில் இருந்த ஒரு அலுவலர் “அழகியவண்ண முகவெட்டி”. அவர் பல்வேறு சிங்கள இலக்கியங்களைப் படைத்தவர். சிங்கள அரசு மீது போர் தொடுத்து போர்த்துக்கேயத் தளபதி “கொன்’ச்டான்டி சூசா” ( Constantine De Sa De Noronha) தோற்றுப் பின்வாங்கியதைப் பாடும் “கொன்சுதாந்தினு ஃகட்டன” இவர் இயற்றிய சிங்கள இலக்கியங்களில் புகழ்பெற்றது. இதைப் பின்பற்றி பல “கட்டன” இலக்கியங்கள் சிங்களத்தில் பாடப்பட்டுள்ளன. இவரது இன்னொரு நூல் சுபாசிதம். தமிழ் - சங்கத மொழி நீதிநூல்களில் இடம்பெற்ற பல செய்யுள்கள் சிங்களத்துக்கு மொழிமாற்றப்பட்டு இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. “அழகியவண்ண முகவெட்டி” என்ற பெயரிலுள்ள முகவெட்டி என்பது ஒரு பதவிப் பெயர். சோழர் காலத்தில் தமிழகத்திலும் முகவெட்டி என்ற அரச பதவி நீடித்தது என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகளிலிருந்தும் தெரியவருகிறது. அப்பதவியிலிருந்தோரின் பணி என்னவென்பது தமிழகத்தில் தெளிவில்லை. ஆனால் இலங்கையில் இருந்த முகவெட்டிகள் பெரிதும் அரச தொடர்பாடல்களில் மொழிமாற்றத்திலும் ஆவணப் பதிவுகளிலும் உதவியிருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது. இவர்களின் முதன்...