Posts

அரம்பையர் நகரம் | தாய்லாந்து 01

Image
தாய்லாந்தில் ஒரு பயிற்சி நெறி. அறிவித்தல் கிடைத்துவிட்டாலும் பாங்கொக் செல்லப் போவதில்லை என்பதை அறிந்தபோது சற்று ஏமாற்றமாகத் தான் இருந்தது.  எங்கள் பயிற்சிநெறி தாய்லாந்தின் ஈசான் பகுதியில்  ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈசான் என்றால் ஈசானமூலை. வடகிழக்குப் பகுதி. அங்கு நிகழ்வைப் பொறுப்பேற்றிருந்த ஊபன் ரச்சதானிப் பல்கலைக்கழகத்துக்கும் பாங்கொக்கிற்கும் சுமார் 600 கிமீ தூரம். உள்ளூர் வானூர்திச் சேவை இருந்தது.    ஆனால் பயணச்சீட்டு கையில் கிடைத்ததும் மகிழ்வாக இருந்தது. பாங்கொக்  வானூர்தியகம் சென்று "ஊபன்" உள்நாட்டு வானூர்தி ஏறும் வரை இடைத்தங்கல் நேரம் 10 மணித்தியாலங்கள்! பாங்கொக்கின் "பிரான் நகர்" - Phra Nakhon மையப்பகுதி பாங்கொக் சுவர்ணபூமி வானூர்தியகத்திலிருந்து பாங்கொக் நகருக்கு 32 கிமீ தூரம். ஆனால் நெரிசலால் பயணம் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேல் எடுக்கலாம். போக வர இரண்டு மணிநேரம். பன்னாட்டுக் குடிவரவில் ஒன்றரை மணிநேரம்.  உள்ளூர் குடிவரவுக்கு ஒன்றரை மணிநேரம் என ஐந்து மணிநேரம் கழித்தாலும், ஐந்து மணித்தியாலம் எஞ்சியிருக்கிறது. ஆகா,  நன்கு திட்டமிட்டால்...

தமிழ்ப் புத்தாண்டும் மரபுக்குறியீடுகளும்

Image
புத்தாண்டு வாழ்த்துப் பரிமாறியபோது அவதானித்தது இது. தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப் பொருத்தமான வாழ்த்து அட்டை எதுவும் இணையத்தில் இல்லை. பெரும்பாலும், கோலம், நிறைகுடம், வாழைத்தோரணம், தஞ்சைப்பெருங்கோவில், பிள்ளையார், கோவில் கோபுரம் பொறிக்கப்பட்ட சாதாரண வாழ்த்து அட்டைகள். இவையா தமிழ்ப்புத்தாண்டின் அடையாளம்? புத்தாண்டுக்கான வாழ்த்து அட்டை, புத்தாண்டு மரபுகளைக் காண்பிக்க வேண்டாமா? செய்தெண்மையை (AI) நாடினால், அது தரும் படங்களும் தகவற்பிழை கொண்டனவாக இருந்தன. சாமந்திப்பூக்கள்? - சாமந்திப்பூக்கள் கொண்ட தோரணம் (சாமந்தி / marigold நம் மண்ணின் மலர் அல்ல; அது தென்னாசியாவில் தோன்றவில்லை; அமெரிக்காவிலிருந்து இறக்குமதியானது). சாமந்திப்பூ நம் மண்ணின் மலர் அல்ல - சுவசுதிகா சின்னம் பொறித்த நிறைகுடம் (வடநாட்டு மரபு, தமிழ் மரபில் திருநீறு சாற்றியிருப்பது அல்லது திலகம் தரித்தது) நிறைகுடத்திற்கு திருநீறு சாற்றுவதே தமிழ்மரபு. - நாமம் தரித்த சூரியன் (சமயக்குறி எதுவுமற்ற சூரியன், சைவத்தமிழ் மரபில் திருநீறு தரித்த சிவசூரியன்), இப்படிப்பல. சரிதான் சட்டியில் இருப்பது தானே அகப்பையில் வரும். பிற இனக்குழுக்...

ஆயிரங்கால் மண்டபம் (கதை)

Image
நன்கு விடிந்திருந்தது. இரவெல்லாம் அழுது வீங்கிச் சிவந்த கண்களுடன் மனைவி வாசற்படியில் அமர்ந்திருந்தாள். உறவினர்களெல்லாம் கூடிநின்றார்கள். தூரத்தில் அவரைக் கண்டதுமே தலைவிரிகோலமாக ஓடிவந்து கட்டியணைத்து அழுதவள், தோளில் அறைந்து திட்டினாள். "ஐயோ மனுசா... எங்க கிடந்து வாறாய்.. உன்னக் காணாம எங்கெல்லாம் தேடுற...." அவள் நன்கு பயந்திருந்தாள். அவர் பெருமிதத்துடன் தொண்டையைச் செருமினார். நடந்ததெல்லாம் சொல்ல மகிழ்ச்சியோடு வாயைத் திறந்தவருக்கு அடுத்தகணம் அந்த எச்சரிக்கை நினைவுக்கு வந்தது. " இங்கு நடக்கும் எதையும் நீ யாருக்கும் சொல்லக்கூடாது. இது என் கட்டளை" "அது.... அது ஒண்டுமில்ல... சிவலை காணாத்துப் பொயித்து. தேடிக் கொண்டு சங்கமக்கண்டிக் காட்டுக்குள போன நான் வழி மாறித்தனே..." "எண்ட தலே.. அங்கென்னத்துக்கு தனிய திரிஞ்ச நீ..... தலை தப்பின தம்புரான் புண்ணியம்..." "செரி கண்ணத் துறை.. அதான் வந்தித்தனே... எல்லாரும் பாத்து சிரிக்குதுகள் ஒள்ளம் தள்ளி நில்லு..." அவர் சிரித்தபடி தன்னை அணைத்திருந்த அவள் கைகளை விடுவித்தார். வெட்கத்துடன் நெளிந்த அவள் "செ...