Posts

கூத்த யாத்திரை: இலங்கைக் கூத்துக்கலையின் குறுக்குவெட்டுப் பார்வை

Image
கூத்து, இலங்கைத்தமிழரின்  ஆடற்கலைகளில் ஒன்று. கூத்துக்கலையில் செவ்வியல் கூறுகள்  இனங்காணப்பட்டிருப்பதால், அதை நாட்டார் கலை என்று மட்டும் முத்திரை குத்த இயலாது என்ற கருத்து தற்போது ஈழத்து ஆய்வுலகில் தோன்றியிருக்கிறது. ஆனால் தமிழ்ப்பண்பாட்டு ஆர்வலனாக,  சுமார் பத்தாண்டுகளாக  கூத்து தொடர்பாக என்னை அரித்துக்கொண்டிருக்கும் வினாக்கள் இரண்டு. இன்றுவரை, இலங்கையில் தமிழர் தேசிய நடனம் என்றால், பரதநாட்டியமே முன்வைக்கப்படுகிறதே, கூத்துக்கு அந்த இடம் ஏன் வழங்கப்படவில்லை?   என்பது முதலாவது வினா. இரண்டாவது வினா, அப்படி தமிழர் தேசிய நடனமாகக் கூத்துக்கு இடம் கொடுப்பதென்றால், கூத்தில் ஊருக்கு ஊர், இடத்துக்கிடம் ஆட்டமுறைகளில் வேறுபாடு நிலவுகையில், அதில் எதை சரியான வடிவமாகக் கருதி, அரங்காற்றுகைக்கென அங்கீகரிப்பது?

இலங்கையின் மிகப்பழைய பிள்ளையார்

Image
  தமிழ்ச்சூழலில் முற்போக்குவாதிகள் என்று தம்மை சொல்லிக்கொள்வோரால் பிள்ளையார் அளவுக்கு ஆரியக்கடவுள், வந்தேறித்தெய்வம் என்று பயங்கரமாகத் தாக்கப்பட்ட கடவுள் வேறெவரும் இருக்கமுடியாது. உண்மையில் பிள்ளையார் என்ற பெயரே பிள்ளையாருடையது இல்லை தான். தமிழில் சிவனின் பிள்ளைகளாகக் கருதப்பட்ட அத்தனை கடவுளருமே பிள்ளையார் என்று அழைக்கப்பட்டனர். மூத்த பிள்ளையார் (விநாயகர்), இளைய பிள்ளையார் (முருகன்), வடுகப் பிள்ளையார் (வைரவர்), சேய்ஞலூர்ப் பிள்ளையார் (சண்டேசுவரர்) என்று பல பெயர்களை கல்வெட்டு - இலக்கியங்களில் காணலாம். சம்பந்தருக்கும் "ஆளுடைய பிள்ளையார்" என்ற பெயருண்டு. இப்படி நிறையப் பிள்ளையார்கள் இருந்தபோதும், அந்தப்பெயர் பிற்காலத்தில் விநாயகருக்கே தனித்துவமான பெயரானது. தமிழில் இத்தனை வாஞ்சையோடு அழைக்கப்பட்ட கடவுள் எப்படி வந்தேறியாக இருக்க முடியும்? கணபதி வெங்கலப்படிமம், பொலனறுவை (12-13ஆம் நூற்றாண்டு)

தென்னம்பிள்ளைக் கலியாணம்

Image
  “தென்னம்பிள்ளைக் கலியாணம்” என் நைண்டிஸ் கிட் நினைவுகளில் மறக்க முடியாத ஒன்று. புதிதாக ஒரு வீட்டில் குடிபுகுந்த பின்னர், முதலில் வைக்கப்படும் தாவரங்களில் ஒன்று, தென்னை. அப்படி ஒரு வளவில் வளர்ந்து நிற்கும் தென்னை ஒருத்தி ஓலைக்கூந்தல் விரித்து மதர்த்து நிற்கத்தொடங்கிய நாளிலிருந்து வீட்டிலுள்ள பெண்கள் அவளை ஊன்றிக் கவனித்துக் கொண்டிருப்பார்கள். அவளைக் கடக்கும் போதெல்லாம் ஆண்கள் படபடப்புடன் பார்வையாலேயே உச்சி முதல் பாதம் வரை அளந்து நகர்ந்து செல்வார்கள். அவர்கள் எதிர்பார்த்திருந்த அந்த நாள் வந்துவிடும். கூரிய மடல் பாளை அவளில் தோன்றி வெட்கத்தில் தலைகுனிந்து நின்றிருக்கும். அதைக் கண்ட முதல் நாளில் பெண்கள் குரவையிடுவார்கள். வீட்டு ஆண்கள் வெடி சுடுவார்கள். ஆம், அந்த வீட்டில் ஒரு குலமகள் வயதுக்கு வந்துவிட்டாள்.

மட்டுக்களப்பு எட்டுப்பகுதி

Image
தொழில் ரீதியாக அடிக்கடி பிறப்பு, இறப்பு, திருமணச் சான்றிதழ்களைக் கையாள்வதுண்டு. அவை எழுபது ஆண்டுகளுக்கு முந்தையவை என்றால் (உடனே இரண்டாயிரத்திலிருந்து எழுபதைக் கழித்து 1930கள் என்று நினைக்கக்கூடாது, நான் சொல்வது 1950கள்!)  கொஞ்சம் கூர்ந்து கவனிப்பேன். பெயரிலோ ஊரிலோ ஏதாவது சுவாரசியமாகக் கிடைக்கும். அப்படி அவதானித்தபோது, அந்தக் காலச் சான்றிதழ்களில் என்னை வியப்புக்குட்படுத்திய விடயம், மட்டக்களப்பிலிருந்து கிடைத்த பெரும்பாலான  சான்றிதழ்களில் அவ்வூர்ப் பெயர் "மட்டுக்களப்பு" என்றே எழுதப்பட்டிருந்தது தான். ஆரம்பத்தில் எழுத்துப்பிழை என்றே நினைத்திருந்தேன். ஆனால் அதிக எண்ணிக்கையில் கிடைத்ததும் தேடி உறுதிப்படுத்திக்கொண்டேன். சரியான உச்சரிப்பு மட்டுக்களப்பு என்பது தான்.  பழைய ஏட்டுச்சுவடிகளிலும், 1970களுக்கு முன் வெளியான சில தமிழ் நூல்களிலும் அந்தப்பெயர் “மட்டுக்களப்பு” என்று தான் இருக்கிறது. மட்டக்களப்பின் செல்லப்பெயர் கூட, “மட்ட நகர்” என்று இல்லாமல் “மட்டுநகர்” என்றே இருப்பதை இங்கு ஒப்புநோக்கலாம். 1973இல் வெளியான நூலொன்றில் மட்டுக்களப்பு. இன்றைய மட்டக்களப்பு நகரின் உண்மையான பெயர...