Posts

Showing posts with the label இலங்கை

பொலனறுவைச் சோழர் கோவில்கள்

Image
  (கனடாவிலிருந்து வெளியாகும் தாய்வீடு இதழின் 2023 ஓகத்து மாத இதழில் வெளியான கட்டுரை. இதழை இங்கு படிக்கலாம்)   பொலனறுவை இராஜராஜ சோழனும் இராஜேந்திர சோழனும் “ஜனநாதமங்கலம்” என்ற பெயரில் ஆண்ட பூமி. அவர்களிடமிருந்து இலங்கையை மீட்ட விஜயபாகு மன்னன் அரசு புரிந்த மண். இலங்கையின் புகழ்பெற்ற மன்னர்களான முதலாம் பராக்கிரமபாகு, நிசங்கமல்லன் உள்ளிட்ட பலர் வாழ்ந்த தலைநகர். கலிங்க மாகோன் இறுதி மன்னனாக வீற்றிருந்து ஆண்ட நிலம். கடந்த ஒரு மாத இடைவெளியில் வெவ்வேறு காரணங்களுக்காக மூன்று நண்பர்களோடு பேசக்கிடைத்தது. அதிசயமாக மூவருமே பொலனறுவை பற்றிப் பேசினார்கள். இருவர் அங்கு குடும்பத்தோடு சுற்றுலா போய் அங்கிருந்த சைவ – வைணவக் கோவில்களைப் பார்வையிட்டு வந்திருந்தார்கள்.   அவர்களில் ஒருவரால் இரண்டே இரண்டு கோவில்களையே பார்க்க முடிந்திருந்தது. அவர் பாவமாக “பொலனறுவையிலுள்ள பெரும்பாலான சோழர் காலக் கோவில்கள் எங்கே இருக்கின்றன என்றே தெரியவில்லை. கூகிள் வரைபடத்திலும் ஒழுங்கான தரவு இல்லை. அந்தக் கோவில்கள் பற்றிய விபரம் எங்கு கிடைக்கும்?” என்று கேட்டார்.   பொலனறுவையில் அமைந்திருக்கும் பெரும...

கண்ணகியும் கீழைக்கரைத் தேசியமும்

Image
"கீழைக்கரை" என்று அடிக்கடி நான் குறிப்பிடுவது, மரபுகளிலும், பண்பாட்டிலும் ஒத்த தன்மையைக் காண்பிக்கின்ற கொட்டியாறுக் குடாவிலிருந்து அறுகங்குடா வரையான இலங்கையின் கிழக்குக்கரையோரப் பட்டியில் (Coastal Belt) காணப்படும் தமிழ் ஊர்களை. இந்த எல்லையின் பெரும்பகுதியை உள்ளடக்குகின்ற, இன்னும் நெருக்கமான பண்பாட்டொருமையைக் காண்பிக்கின்ற பிராந்தியத்தை தான் மட்டக்களப்புத் தேசம் என்கிறார்கள். இப்படிச் சொல்வதால், இந்த "கீழைக்கரை" என்ற வரையறை புதியது என்று அர்த்தமில்லை. அந்தப் பண்பாட்டொருமை ஏற்கனவே பல மானுடவியலாளர்களால் தெளிவாக இனங்காணப்பட்டிருக்கிறது. மட்டக்களப்புத் தேசம் என்ற வரைவிலக்கணத்தை விடப் பரந்த அர்த்தத்தில் மார்க் விட்டாகர் (Mark P Whitaker), டெனிஸ் மக்கில்வ்ரே (Dennis B. McGilvray) முதலிய மானுடவியல் அறிஞர்கள் தங்கள் ஆய்வுகளில் கீழைக்கரை (East Coast) என்ற சொல்லாடலைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதில் வியப்பு என்னவென்றால், கரையோரப்பட்டியில் நெடுக்குவாக்காக மூன்று மாவட்டங்களை ஊடறுத்து சுமார் 225 கிமீ தூரம் நீளும் பிராந்தியத்தில் நம்மால் அவதானிக்க முடியும் பண்பாட்டு ஒருமை, வெறும...

சிங்களப் பத்தினியும் கேரளப் பகவதியும்

Image
கண்ணகி ஈழத் தமிழருக்கு மட்டும் தான் தெய்வம். ஆனால் இலக்கிய மரபில் அவலச்சுவை நிறைந்த வாழ்க்கை வாழ்ந்த துன்பியல் நாயகி அவள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கடந்தும், அவள் நிகழ்ந்த இந்தத் தமிழ் மரபு, அந்தச் சிறு இடத்தைக் கூட அவளுக்கு கொடுக்கவே இல்லை .                                              அங்கீகரிக்கப்பட்ட மேல்நிலைக் கலையாடல்களான சாஸ்திரீய சங்கீத இசையிலும் சரி, திரைத்துறையிலும் சரி, கண்ணகி தெய்வப்பெண்ணாக அல்லது ஒரு கைவிடப்பட்ட அகத்துறை நாயகியாக - மறைமுகமாவேனும் - பாடப்பட்ட ஒரு இடமாவது அண்மைக்காலத்தில் பதிவாகியிருக்கிறதா? உடனே எனக்கு நினைவுக்கு வருவது மூன்றே மூன்று திரைப்பாடல்கள்தான். ஒன்று "ஒளிமயமான எதிர்காலம்" (எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக). அடுத்தது "போறாளே பொன்னுத்தாயி" (கண்டாங்கி சேலை கட்டும் கண்ணகியே கண்ணகியே) மூன்றாவது நாக்கமுக்க. தமிழ் வெள்ளித்திரையில் கண்ணகியின் கதை வெளியாகி அரைநூற்றாண்டு கடந்துவிட்டது. ஆனால் மகாபாரதம், இராமாயணம்...

ஒல்லாந்தரை ஏமாற்றிய பாதிரியாரின் முக்காடு

Image
மட்டக்களப்பு வாவியின் மேற்குக் கரையில் படுவான்கரைக் கிராமங்களை இணைத்தபடி ஓடுகிறது B18 வழித்தட எண் கொண்ட வீரமுனை - அம்பிளாந்துறை வீதி. மண்டூருக்கும் வெல்லாவெளிக்கும் இடையே அதன் எட்டாம் கிமீ மைல்கல்லுக்கு (மைல்கல்லா கிலோமீட்டர் கல்லா? 🤔) அருகில் நின்று மேற்கே பார்க்கும் போது இந்த மலையைக் காணலாம். இங்கிருந்து மட்டுமல்ல. மேகமூட்டம் இல்லாத நாளொன்றில் கீழைக்கரையில் தெற்கே கோமாரியிலிருந்து வடக்கே மட்டக்களப்பு நகரம் வரை மேற்குப்பக்கம் திரும்பி நின்றால் இதைக் காணலாம் என்கிறார்கள். அம்பாறை மாவட்டம் உகணைக்கு அருகே உள்ள வெலிம்பே ஹெல (Walimbe Hela) என்ற மலை தான் இது.   வெலிம்பே ஹெல வெலிம்பே ஹெல இலங்கையின் கிழக்கு மாகாணத்தின் மிகப்பெரிய மலை.  655 மீ உயரமானது. ஆங்கிலத்தில் Fraiar's Hood என்று பெயர். பொருள் பாதிரியாரின் முக்காடு. தூரத்தில் நின்று பார்க்கும் போது சில குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவுகளின் மதகுருமார் அணியும் தலையணி போல் தென்பட்டதால் இதை வெள்ளையர்கள் அப்படி அழைத்திருக்கிறார்கள்.  பாதிரியாரின் முக்காடு மலை, ஒரு கிட்டிய தோற்றம் (Credits: lakdasun.lk) இ...

தேனவரை நாயனாரும் தெண்டீர ஈச்சரமும்

Image
(2019 ஒக்டோபர் 18ஆம் திகதி, கொழும்பில் இடம்பெற்ற இலங்கை இந்து பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வுக்கட்டுரை. நிகழ்த்துகையின் விழிய வடிவத்தைக்  கட்டுரையின் கீழே காணலாம்.) சுருக்கங்கள்: பொ.பி - பொது ஆண்டுக்குப் பின் (கி.பி), ம.வ - மகாவம்சம் உப்பலவண்ண ஸ்ரீ விஷ்ணு தேவாலே, தெவிநுவர. கட்டுரைச் சுருக்கம்: தென் மாகாணத்தின் மாத்தறை நகருக்குத் தென்கிழக்கே 8 கிமீ தொலைவில், தெவிநுவர நகரில் அமைந்திருக்கிறது தெவுந்தர உபுல்வன் ஸ்ரீ விஷ்ணு தேவாலயம். உபுல்வன் என்ற சிங்களப்பெயருக்கு ‘உற்பலவண்ணன்’, நீல அல்லியின் வண்ணத்தைக் கொண்டவன், என்று பொருள். சிங்கள பௌத்த மரபின் படி இலங்கைத்தீவின் நாற்பெரும் காவல் தெய்வங்களில் ஒருவன் உபுல்வன். தெவிநுவரையிலுள்ள உபுல்வன் தேவாலயத்தின் அருகே சிதைந்த கற்றூண்களையும் பண்டைய இடிபாடுகளையும் இன்றும் காணலாம். அதுவே மத்திய கால இலங்கையில் திருமாலுக்கென அமைந்து புகழ்பூத்திருந்த தேனவரை நாயனார் கோவில். அக்கோவிலுக்கு அருகே கிடைத்த தொல்பொருட்சான்றுகள் அங்கு சிவன் கோவிலொன்றும் இருந்ததைச் சொல்கின்றன. இலங்கைத் தமிழ...