Posts

Showing posts with the label கல்வெட்டு

கிவுலக்கடவலைக் கல்வெட்டு: வரலாற்றில் புது ஒளிக்கீற்று

Image
ஓரிரு மாதங்களுக்கு முன்னர் , திருக்கோணமலையின் கோமரங்கடவைப் பிரதேசத்திலுள்ள கிவுலக்கடவலை என்ற இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட தமிழ்க்கல்வெட்டு , இலங்கை ஆய்வுலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது .   இக்கல்வெட்டைப் படித்த பேராசிரியர் ப . புஷ்பரட்ணம் (2021:6-7), மற்றும் கலாநிதி கா . இந்திரபாலா (2021:8,18) ஆகியோர் இக்கல்வெட்டு தொடர்பான புதுமையான – அருமையான தகவல்கள் அடங்கிய காத்திரமான கட்டுரைகளை பொது ஊடகங்களில் வெளியிட்டிருந்தனர் . இந்தக் கல்வெட்டு குறிப்பிடும் காலிங்க விஜயவாகுவை,   அவர்களால்   கலிங்க மாகோனாக அடையாளம்   காண   முடிந்ததே இக்கல்வெட்டின் சிறப்பாக இருந்தது . கலிங்க மாகோனை    பாலி  -  சிங்கள   நூல்கள்   கொடுங்கோலனாகவும் ,  இலங்கைத்   தமிழ்   நூல்கள்   சரித்திர   நாயகனாகவும்   சித்தரிக்கின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.    கிவுலக்கடவலைக் கல்வெட்டின் வாசகம் வருமாறு :   [ சிதைந்த வடமொழி சுலோகம் ]   ஸ்வஸ்திஸ்ரீ …… .[ த்திகள் ?] [ ஸ்...

எவனோ ஒருவன் கை அம்பு

Image
நான் இன்றும் ஆத்திகன் தான். நமக்கு மேல் ஏதோ ஒன்று இருக்கிறது என்று எண்ணுபவன். ஆனால், தொல்லியல், வரலாறு, இலக்கியம் என்பனவற்றில் எல்லாம் ஆர்வம் ஏற்பட்ட பின்னர், கடவுள் நம்பிக்கை குறைந்துவிட்டது என்றே சொல்வேன். அல்லது கடவுளைப் பற்றிக் கவலைப்படாத ஒரு நிலை. ஆனால் எப்போதாவது திடுக்குறச் செய்யும் ஏதாவது அனுபவங்கள் ஏற்படுவது வழமை. இன்று ஏற்பட்டதும் கிட்டத்தட்ட அப்படிப்பட்ட ஒன்று தான். ' தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு ' கட்டுரையைப் படித்திருப்பீர்கள். உண்மையில், அது தொடர்பாக போன ஆண்டே ஒரு கட்டுரை எழுதலாம் என்று நினைத்தேன். ஆனால் '2020இல் தானே சரியாக 500 ஆண்டுகள் ஆகின்றது. எனவே அடுத்த ஆண்டு எழுதுவோம்' என்று விட்டுவிட்டேன் ஆனால் இந்தமுறை இணையத்தில் தேடியபோது குறிப்புக்கள் ஆறாம் விஜயபாகுவின் ஆட்சி ஆரம்பிக்கும் ஆண்டாக 1507, 1509, 1513 என்று தான் காட்டிக்கொண்டு இருந்தன. 1509, 1513 என்று குறிப்பிட்ட சான்றுகள் அனேகம். எதைக் கருத்தில் எடுத்தாலும் சரியாக 500 ஆண்டுகள் வரமுடியாது. ஆனால் 2020இல் ஐநூறாம் ஆண்டு வருவதாக நினைத்தல்லவா போன ஆண்டு எழுதுவதைத் தவிர்த்தோம்? அப்படி...

தம்பிலுவில் கல்வெட்டுக்கு வயது ஐநூறு!

Image
தென்கிழக்கிலங்கையின் மிகப்புராதனமான ஆலயங்களில் ஒன்றான திருக்கோவில் சித்திர வேலாயுத சுவாமி கோவிலுக்குள் நுழைந்து நீங்கள் இடப்பக்கம் திரும்பினீர்களென்றால், உள்வீதி மதிலோடு இணைந்தபடி அடைத்துக் கட்டப்பட்டுள்ள ஓர் அறையைக் காணலாம். எட்டிப்பார்த்தீர்களென்றால் அங்கு கட்டுமானப் பொருட்களும் சில விக்கிரகங்களும் இருக்கும். அவை கடந்த குடமுழுக்கின் போது அகற்றப்பட்ட, பின்னப்பட்ட விக்கிரகங்கள். அப்படியே இன்னும் கஷ்டப்பட்டு எட்டி அறையின் மேற்குப்புறமாக பார்த்தீர்களென்றால், மூலையில் தரைக்கு கொங்கிரீட் பரவி அதில் நடப்பட்டுள்ள கற்றூண்களையும் பலகைக்கற்களையும் காணலாம். உற்றுப்பார்த்தால் அவற்றில் தேய்ந்து போன எழுத்துக்களையும்  பார்க்க முடியும். இன்று பண்டகசாலையாக பயன்படும் இந்த அறையில் நாட்டப்பட்டிருக்கும் ஒரு தூண் தான் தம்பிலுவில் கல்வெட்டு. திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திலுள்ள கல்வெட்டுக்களும் கற்றூண்களும் காலனித்துவ கால ஆவணங்களில் இலங்கையின் தொல்பொருட்கள், மரபுரிமை நகரங்கள், பாரம்பரியச் சொத்துக்கள் பற்றிய குறிப்புக்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைத்தாலும், அவை பற்றிய நவீன மு...

சாகாமம்

Image
சாகாமம் எங்கள் ஊரை அடுத்திருக்கும் கிராமம். போக்குவரத்து வசதிகள் பெரிதாக இல்லாத, குறைந்தளவிலான மக்கள் வாழும் பின்தங்கிய கிராமம். ஆனால் அது இலங்கை வரலாற்றில் முக்கியமாகப் பதிவான இடம். மகாவம்சத்திலேயே பதிவாகி இருக்கிறது. சோழர் காவலரணாக. மகாவம்சத்தின் 58ஆம் அத்தியாயத்தில் விஜயபாகு சோழர்களை நோக்கிப் படையடுத்தது இப்படிச் சொல்லப்படுகிறது. "சோழர்களின் ஆணவத்தை அழிப்பதற்காக, (விஜயபாகு) மன்னனின் இன்னும் இரு திறமை வாய்ந்த அதிகாரிகள் கரையோர 'வெள்ள மகாபத' பெருஞ்சாலை வழியே அனுப்பப்பட்டார்கள்...... அவர்கள் சாக்காமத்திலும் அதன் அருகே அங்குமிங்கும் இருந்த (சோழர்) காவலரண்களை சூறையாடினார்கள்." (மகாவம்சம் 58:41 - 47).  சோழர்களின் ஆதிக்கம் கிழக்கிலங்கையில்  சாகாமம் வரை பரந்திருக்கிறது என்பதற்கு ஆதாரமாக இதைக் கொள்வார்கள். சாகாமத்துக்குக் கிழக்கே உள்ள திருக்கோவில் ஆலயத்தை சோழர்களுடன் இணைக்கும் மரபுரைகளையும் இங்கு இணைத்து நோக்கலாம். விஜயபாகுவுக்கு நூறாண்டுகள் பிந்திய மகா பராக்கிரமபாகு மன்னனும் சாகாமத்தில் எதிர்ப்புகளைச் சந்தித்திருக்கிறான் என்பதையும் அதே மகாவம்சம் பதிவுசெய...

வெல்கம் வேரத் தேவர்

Image
அரசியல், சூழ்நிலைக் காரணங்களால், புத்தபிரான் இன்று தமிழராலும் வெறுக்கப்படுபவராக மாறியிருக்கிறார். ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், அவர் நம் முப்பாட்டன்மாருக்கு எத்தனை நெருக்கமானவராக இருந்தார் என்பதை நான் சொல்லித் தான் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டுமென்றில்லை. அப்படியும் அதில் சிறிது ஐயமிருந்தால், நீங்கள் செல்லவேண்டிய இடம் ஒன்று இலங்கையில் இருக்கிறது. சிங்கள வரலாற்றாசிரியர்களே தமிழ்ப்பௌத்த விகாரை என்று சான்றிதழ் கொடுத்த இடம். திருக்கோணமலையின் வெல்கம் விகாரை. வெல்கம் வேரத் தேவர்   கடந்த வாரம் நண்பர்களோடு திருக்கோணமலை சுற்றுலா சென்றபோது அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. சரித்திரப்புகழ் வாய்ந்த கன்னியா வெந்நீரூற்றுக்கு வடக்கே பத்து கிமீ தொலைவில் அமைந்திருக்கிறது வெல்கம் விகாரை. சோழர் படையெடுப்பின் பின் 'ராஜராஜப்பெரும்பள்ளி'. அது தெற்கு நோக்கியதாக சதுரமான அமைப்பில் செங்கற்களால் கட்டப்பட்டிருக்கிறது. மையத்தில் சுண்ணக்கல்லாலான புத்ததேவரின் திருவுருவம் நின்ற நிலையில் காட்சியளிக்க, சுற்றி வந்து வணங்கும் வகையில் கருவறை அமைக்கப்பெற்றிருந்தது. கருவறையின் முன்பு, வலம் இடமாக இரு சி...