Posts

Showing posts from October, 2018

திருக்கோவில் முருகு

Image
திருக்கோவில் ஆடி அமாவாசை ஆழிப்புனலாடல் காட்சி (நன்றி: Akish 4K Studio ) இலங்கையின் மட்டக்களப்பு – அம்பாறை மாவட்டங்கள் இணைந்த பழைய மட்டக்களப்புத் தேசத்தில் முதன்மை பெற்று விளங்கிய திருத்தலம், திருக்கோவில் சித்திரவேலாயுத சுவாமி ஆலயம். வடக்கே ஏறாவூர்ப்பற்று முதல் தெற்கே கூமுனைப்பற்று வரை, சுமார் இருநூறு கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பில் வாழ்ந்த சைவத்தமிழ் மக்கள் கொண்டாடிப் போற்றிய திருத்தலம் அது. முழு மட்டக்களப்புத் தேசத்துக்குமே உரிமையாகவிருந்த அக்கோவில், தேசத்துக்கோவில் என்ற மரியாதையைப் பெற்றிருந்தது. வரலாற்றில் சோழராட்சிக்காலத்துடனும், கலிங்க மாகன் காலத்துடனும் இணைத்து நோக்கக்கூடிய பழைமை வாய்ந்த திருக்கோவில், கண்டி மற்றும் கோட்டை மன்னர்களின் மானியங்களையும், மட்டக்களப்பை ஆண்ட சிற்றரசர்களின் மதிப்பையும் பெற்ற சரித்திரப் பிரசித்தி வாய்ந்த அருட்கோவில். அத்திருத்தலத்தின் தோற்றத்தையும் வளர்ச்சியையும் வரலாற்று பூர்வமாக ஆராய்கின்றது இந்த ஆய்வுக்கட்டுரை.   அறிமுகம் திருக்கோவில் என்பது தமிழரைப் பொறுத்தவரை புனிதமான சொல்லாடல். புகழ்பெற்ற இறைக்கோட்டங்களை எல்லாம் திருக்கோவில...

ஒரு பன்றியின் சிலையும் சில அக்கரை மாடுகளும்

Image
கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரத்தின் தேரோட்டம்  கடந்த மாதம் இடம்பெற்றது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அக்கோவிலுக்கு அடிக்கடி செல்வது வழமை தான் என்றாலும், உற்சவத்தில் இதுவரை பங்குபற்றியதில்லை. இவ்வாண்டு எப்படியும் தவிர்ப்பதில்லை என்ற திட்டத்துடன் கடந்த செப்டம்பர் 27 வியாழக்கிழமை கோவிலுக்குப் புறப்பட்டேன். கோவிலுக்குள் நுழைந்ததுமே வாசலில் கம்பீரமாக நின்ற இரு தேர்களும் கவனத்தைக் கவர்ந்தன. அந்தத் தேர்களைப் பற்றி, ஆரையம்பதியைச் சேர்ந்த நண்பரும் ஆய்வாளருமான திரு.சொ.பிரசாத் ஏற்கனவே சொல்லியிருக்கிறார். பழைமைவாய்ந்த அத்தேர்களின் சிற்பங்கள் அறியாமையால் ஆண்டுக்காண்டு இழக்கப்பட்டு வருகின்றன என்பதையும், அந்தச் சிற்பங்களை ஆவணப்படுத்துவது அவசியம் என்றும் குறிப்பிட்டிருந்தார். கொக்கட்டிச்சோலைத் தேர்களிலுள்ள சிற்பங்கள் பற்றி, ஆலயத்தின் 1998 குடமுழுக்கின் போது வெளியான சிறப்பு மலரான “தேரோட்டத்தில்”  கிழக்குப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கலைவாணி கந்தசாமியால் எழுதப்பட்ட அருமையான கட்டுரையையும் முன்பு படித்திருந்தேன்.  எனவே ஆர்வம் தூண்ட தேர்களை நெருங்கி அவதானிக்கத் தொடங்கினேன். மு...

விகடனும் தவ்வையும்

Image
தமிழரும் தவ்வை வழிபாடும் அன்னை தவ்வை,  காஞ்சி கைலாசநாதர் கோவில் சிற்பம். "புலமைச்சொத்து" (Intellectual Property) பற்றிய அறிமுகமோ, விழிப்புணர்வோ நம் சமூகத்தில் அவ்வளவாக இல்லை. அதுவும் சமகால சமூக வலைத்தள யுகத்தில் "லைக் வாங்குவது, பெயர் வாங்குவது" என்பது ஒரு மனநோயாகிவிட்ட நிலையில், யாரோ ஒருவன் மணிக்கணக்கில் குந்தியிருந்து தன் பொழுதைச் செலவழித்து எழுதித்தள்ளும் ஏதோ ஒன்றை, "நன்றி:இன்னார்" என்று கூடக் குறிப்பிடாமல் இலகுவாகக் "கொப்பி - பேஸ்ட்" செய்து, எத்தனை விருப்பங்கள் வந்திருக்கின்றது என்று பார்க்கும் பேர்வழிகளே அதிகம். அது புலமைத்திருட்டு என்ற குற்றவுணர்வோ, யாரோ ஒருவன் உழைப்பை உறிஞ்சி உண்பதற்குச் சமன் என்ற மனக்கிலேசமோ அத்தகைய யாருக்குமே இருப்பதில்லை. இப்படி "வெட்டி -ஒட்டி" லைக்கை எண்ணுவது, பெயர் தேடுவது ஒருவகைப் புலமைத்திருட்டு என்றால், ஒரு ஆக்கமொன்றை வரிக்கு வரி நுணுகிப் படித்து, சொற்களை மட்டும் முன்பின் மாற்றி இன்னொரு ஆக்கமொன்றை படைப்பது மிகநுண்மையான புலமைத்திருட்டு. விகடனின்  இந்தக்  கட்டுரையிலுள்ள ஒவ்வொரு பந்...