கிழக்கிலங்கை - ஒரு சூம் உரையாடல்





கடந்த யூலை 19ஆம் திகதி அரங்கம் பத்திரிகையும் Tamil Institute for Leadership excellence அமைப்பும் இணைந்து நடாத்திய சூம் கலந்துரையாடலின் யூடியூப் இணைப்பு இணைக்கப்பட்டிருக்கிறது.

"ஐரோப்பியர் வருகையின் பின்னர் கிழக்கிலங்கை வரலாற்றிலும் பண்பாட்டிலும் ஏற்பட்ட மாற்றங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினேன் (50:00 - 1:05:00). திரு.ராஜ்குமார் அவர்கள் ஒருங்கிணைக்க, திரு.சீவகன் பூபாலரட்ணம் ஐயா அவர்கள் அறிமுகம் செய்துவைத்தார். சூம் உரையாடல் முழுவதிலும் தொகுப்புரை செய்து கலந்துரையாடலைச் சீராகக் கொண்டு சென்றவர் பேராசிரியர் மௌனகுரு ஐயா அவர்கள். 

உண்மையில் கிழக்கிலங்கை பற்றிய தோராயமான அறிமுகத்தைப் பெற்றுக்கொள்வதற்கு இந்த முழுமையான உரையாடல் போதுமானது. "கிழக்கிலங்கை பூர்வீக வரலாறும் பண்பாடும்" என்ற தலைப்பிலான திரு விஜயரட்ணா எட்வின் ஐயா அவர்களின் உரை, "கிழக்கிலங்கையின் தமிழ் சமூக உருவாக்கமும் பண்பாட்டு உருவாக்கமும்" என்ற தலைப்பிலான கலாநிதி சுந்தரம்பிள்ளை சிவரட்ணம் ஐயா அவர்களின் உரை, "கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகத்தின் உருவாக்கமும் இஸ்லாமிய பண்பாட்டு உருவாக்கமும்" என்ற தலைப்பிலான பேராசிரியர் ரமீஸ் அப்துல்லா ஐயா அவர்களின் உரை, என்பவற்றை ஒட்டுமொத்தமாகச் சேர்த்தால் கிழக்கிலங்கை வரலாறு முழுமை பெற்றுவிடுகிறது. 

கிழக்கிலங்கையின் அரசியல், நிர்வாகம், நிலப்பரப்பு, பொருளாதாரம், சமயம், துறைமுகங்கள், பண்பாடு, உணவுப்பொருட்கள், அன்றாட வாழ்க்கை என்பவற்றில் ஐரோப்பியரால் அல்லது அவர்களின் பின்னணியில் உருவான அகக்காரணிகளால் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அல்லது திருப்பங்கள் என்னுரையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. 

இறுதியாக இடம்பெற்ற பேராசிரியர் மௌனகுரு ஐயாவின் உரை மிக முக்கியமானது. சமூகவியல், மானுடவியல் துறைகளில் ஆர்வமுள்ளவர்கள் தவறவிடக்கூடாதது. ஆர்வமுள்ளவர்கள் தொடர்கின்ற கேள்வி பதில் பகுதியையும் அவதானிக்கலாம்.




0 comments:

Post a Comment

 

Copyright © "து" | Credits: Free CSS Templates and BTDesigner