தமிழ்ச்சூழலில் முற்போக்குவாதிகள் என்று தம்மை சொல்லிக்கொள்வோரால் பிள்ளையார் அளவுக்கு ஆரியக்கடவுள், வந்தேறித்தெய்வம் என்று பயங்கரமாகத் தாக்கப்பட்ட கடவுள் வேறெவரும் இருக்கமுடியாது. உண்மையில் பிள்ளையார் என்ற பெயரே பிள்ளையாருடையது இல்லை தான். தமிழில் சிவனின் பிள்ளைகளாகக் கருதப்பட்ட அத்தனை கடவுளருமே பிள்ளையார் என்று அழைக்கப்பட்டனர். மூத்த பிள்ளையார் (விநாயகர்), இளைய பிள்ளையார் (முருகன்), வடுகப் பிள்ளையார் (வைரவர்), சேய்ஞலூர்ப் பிள்ளையார் (சண்டேசுவரர்) என்று பல பெயர்களை கல்வெட்டு - இலக்கியங்களில் காணலாம். சம்பந்தருக்கும் "ஆளுடைய பிள்ளையார்" என்ற பெயருண்டு. இப்படி நிறையப் பிள்ளையார்கள் இருந்தபோதும், அந்தப்பெயர் பிற்காலத்தில் விநாயகருக்கே தனித்துவமான பெயரானது. தமிழில் இத்தனை வாஞ்சையோடு அழைக்கப்பட்ட கடவுள் எப்படி வந்தேறியாக இருக்க முடியும்?
Browse » Home »
Posts filed under பிள்ளையார்
இலங்கையின் மிகப்பழைய பிள்ளையார்
கணபதி வெங்கலப்படிமம், பொலனறுவை
(12-13ஆம் நூற்றாண்டு)
Subscribe to:
Comments (Atom)